பாடல்-பண் : தலித் சுப்பையா
பல்லவி : வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட கள்ளப்பிள்ளை காங்கிரசு
இத்தாலிப் பெண்மணியின் ஏவல்படையாய் மாறிப்போச்சு.
அ.பல்லவி : ஊருக்கு நாளுபேரு கணக்குங்க - சும்மா
பேருக்கு காங்கிரசு இருக்குங்க. (வெள்ளை)
சரணம் 1 : காமராசர் செல்வாக்குல ஆண்டது - பிறகு
கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆனது
குருடனுக்கு ராசபார்வை கிடைக்குமா - கை
தமிழகத்தை ஆளும்கனவு பலிக்குமா (வெள்ளை)
சரணம் 2 : அரசியலில் காங்கிரசு சாக்கடை - இரு
கரைகளாக கழகங்கள் வெளிப்படை
மாறி மாறி பிச்சைவாங்கி செயிக்குது - இதில்
மான ஈனம் ஏதுமின்றி குரைக்குது! (வெள்ளை)
சரணம் 3 : கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது - நம்
கடல்மக்கள் உரிமைகளை பறிச்சது
சிங்களப்படை மீனவரை கொல்லுது - இதை
தடுத்துநிறுத்தத் துப்பில்லாமல் மழுப்புது (வெள்ளை)
சரணம் 4 : அழிவுப்படை ஈழத்துக்கு போனது - அங்கு
அடிபட்டு அசிங்கப்பட்டு மீண்டது
எறிந்தபந்து எதிர்த்திசையைத் தாக்குமே - அதைத்
தமிழகத்தில் நாமெல்லோரும் பார்த்தோமே. (வெள்ளை)
சரணம் 5 : தமிழ்ஈழ விடுதலையைத் தடுக்குது - அதன்
தலைவரையே கொன்றுவிடத் துடிக்குது
இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்குது - தமிழரை
இளிச்சவாயர் கூட்டமென்று நினைக்குது. (வெள்ளை)
சரணம் 6 : புலிகளை அழித்துவிடத் துடிக்குது - அவர்தம்
தடயமறிய ராடர்களை கொடுக்குது
படையனுப்பி பயிற்சிதந்து அழிக்குது - மூன்று
மலையாளிகள் பொறுப்பில்இது நடக்குது (வெள்ளை)
சரணம் 7 : சட்டமன்றத் தீர்மானத்தை மதிச்சதா - அதை
சலூன்கடை தாள்என்று நினைக்குதா
மனிதச்சங்கிலி லட்சம்பேரு நடத்துனோம் - எந்தப்
பலனுமின்றி தமிழினமே தவிக்கிறோம். (வெள்ளை)
சரணம் 8 : பாக்கிஸ்தானைப் பிரித்துத் தந்தார் தாத்தனார்
பங்களா தேசுக்கு காரணமே மாமியார்
ஈழத்தமிழர் அழிப்பைச் செய்தார் கணவரு - அந்த
இரண்டகத்தை சோனியாவும் செய்கிறார். (வெள்ளை)
சரணம் 9 : காங்கிரசை ஒழிக்கச்சொன்னார் பெரியாரு - அந்தக்
கடனடைக்க களமாடுது தமிழ்நாடு
தமிழ்ஈழம் மலரப்போவது நிச்சயம் - துரோகக்
காங்கிரசை ஒழிப்பதே நம் லட்சியம் (வெள்ளை)
நன்றி : புரட்ச்சிப்பெரியார் முழக்கம்
Saturday, February 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment