Sunday, December 16, 2007

அவர் எங்கள் வேர்_ நா.இராசாரகுநாதன்

ஈரோட்டில்
முளைவிட்டு
பாரெட்டும் படர்ந்த
பகல் நீ !

ஆதிக்க அம்மிகள்
பறந்தன
உன் ஆடைக்காற்றில்

உன்னால்
பாமரக் குடிசைகள்
பகுத்தறிவுக் குடில்களாயின

அவமரியாதைச் சேற்றில்
அழுந்திய பெண்களை
சுயமரியாதைக் கைகொடுத்து
உயர்த்தினாய் நீ !

நீ
வளர்த்த முல்லைகள்
" மஞ்சளாய்" நிறம்மாறினும்
உன் மூலவேரில்
மீண்டும் மீண்டும்
முளைக்கும்
எங்கள் தலைமுறைகளுக்கான
தளிர்!

No comments: