Tuesday, June 24, 2008

பெரியாரின் எழுத்தும் பேச்சும்- குடியரசு முன் பதிவுத்திட்டம்

செப்தம்பர் 17 இல் 27 தொகுதிகள் வெளிவரவிருக்கின்றன.

பெயரளவுக்கு மட்டுமே பெரியாரின் பெயரை உச்சரிப்பவர்கள்- கழக ஆட்சிகள் செய்யத்தவறிய இப்பெரும் பணியை, பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்திருக்கிறது. பெரியாரை நிலை நிறுத்த- அவரின் சிந்தனைகளை ஆவணப்படுத்தும் அரிய முயற்சி.

காரல்மார்க்சு, காந்தி, அம்பேத்கர் போன்றோருக்கு இருப்பதைப்போல காலவரிசைத்தொகுப்பு நூல் ( collected works)பெரியாருக்கு இல்லையே என்ற பெருங்கவலை இனி இல்லை

1925 முதல் 1938 வரை வெளிவந்த குடியரசு இதழ்கள் முழுமையும் தொகுக்கப்பெற்று 27 தொகுதிகளாக ( ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கு மேல்) செப். 17 இல் வெளியிடப்பெறவிருக்கின்றன.

ரூ 5400 விலையுள்ள இத்தொகுதிகள் முன்பதிவுத் திட்டத்தின் கீழ் ரூ 3500 க்கே உங்களுக்குக் கிடைக்கும்.

தொகை அனுப்பக் கடைசி நாள் 31.08.2008

பணவிடையாகவோ ( M.O) வரைவோலையாகவோ(Draft ) மட்டுமே அனுப்புங்கள்.
காசோலை ( Cheque)அனுப்ப வேண்டாம்.

T.S.MANI என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி

தா. செ. மணி
பெரியார் படிப்பகம்
மேட்டூர் அணை 1
சேலம் மாவட்டம் - 636 401

No comments: