Tuesday, December 11, 2007

மாயைகளை உடைத்தெறிந்த வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை.......

தோழமையோடு அரசெழிலன் வணக்கம்.

தனக்குத் தெரிந்த செய்திகளை யாருக்கும் சொல்லாமல், அவற்றால் தான் மட்டுமே பயன் அடையும் ஒரு பிற்போக்குத் தனம் நம்மிடையே மிகப்பெரும்பாலோருக்கு உண்டு.
இந்தத் தன்மையிலிருந்து மிகவும் மாறுபட்டு புதுச்சேரியில் சில தோழர்கள் இணைந்து புதுச்சேரி
வலைப்பதிவர் சிரகம் என்ற அமைப்பினைத் தொடங்கி, கடந்த 09.12.2007 அன்று
வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை ஒன்றினைப் புதுச்சேரி சற்குரு உணவகக் கூட்ட அரங்கில் மிகமிகச் சிறப்பாக நடத்தினர். தோழர்கள் கோ. சுகுமாறன், இரா.சுகுமாறன், முனைவர் நா.இளங்கோ, முனைவர் மு. இளங்கோ ஆகியோரின் முன் முயற்சியிலும் பெரு முயற்சியிலும் இக்கருத்தரங்கமும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.

2 comments:

Ilano.ki said...

அன்புள்ள அரசெழிலன்

தங்களின் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை படித்தேன் மனமார்ந்த பாராட்டுகள்...

அன்புடன்


சேலம் கி. இளங்கோ

92444 32829

இரா.சுகுமாரன் said...

தங்களின் கருத்துக்கு நன்றி!

இன்னும் பல செயல்கள் செய்ய வேண்டியுள்ளது அதற்கெல்லாம் தாங்களைப் போன்றோரின் கருத்துக்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

தமிழின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் எனில் இது போன்ற செயல்கள் மிகவும் அவசியமான ஒன்று என்றே கருதுகிறோம்.